Friday 13 August 2010

தேடல்

நான் சின்ன வயசா இருக்கும் போது என் தகப்பனார் அரசாங்க உத்தியோகத்தில் எப்பவும் வெளியூர் போய் வார கடைசி நாட்களில் வீடு வருவார் , அவர் வருகைகா நான் பஸ் ஸ்டான்ட் போய் கடைசி பஸ் போகும் வரை காத்திருப்பேன் , பெரும்பாலான நாட்களில் நான் காத்திருந்த நாளுக்கு அடுத்த நாளே அவர் வருவர் , அதுவும் நாங்கள் உறங்கியபின் , இப்படியாக என் பிள்ளை பருவம் !!! தந்தையின் அன்புக்காக ஏங்கிய பிள்ளை பருவம் என்னுடையது , அதுவும் 19 வயது வரை இப்படி தேடி தேடி வீட்டு உறவுக்களுடன் வாழ்ந்த நான், சம்பாதிக்க 19 வயதில் வீட்டை விட்டு வெளியேறியவன் இன்னும் வீட்டை அடைந்த பாடில்லை !!! எதை தேடி வீட்டை விட்டு வெளியே வந்தேனோ அந்த தேடல் இன்னும் முடிந்த பாடில்லை !! தேடல் தொடருகிறது இன்று வரை , என்று முடியுமோ இந்த தேடல் !!!!

Monday 31 May 2010

மறு வாழ்வு எதற்கு ??

எப்பவும் போல காலை 9 மணிக்கு வேலைக்கு (10/12/2009) போய் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் மாரடைப்பு , 10am ஆம்புலன்ஸ் வரவழைக்க பட்டு Wexham Park hospital சரியான நேரத்தில் போனதினால் , இன்று மறு படியும் இவ்வுலகில் மறு பிறப்பு எடுத்து உள்ளேன் , மூன்று வாரம் Wexham Park கில் இருந்தபோது Nurse களின் வேலை பார்த்து வியந்தேன் , சகிக்க முடியாத ஒரு profession எல்லா வற்றையும் சகித்து கொண்டு nurse மார்கள் செய்யும் சர்வீஸ் வார்த்தையால் விவரிக்க முடியாது , 29/12/2009 transferred from Wexham park to Hairfield for open Heart surgery , 30/12/2009 Heart Operation எத்தனை உறவினர் இருந்தும் அனாதையாக , வந்தது வரட்டும் என்று ஆண்டவன் விட்ட வழி என்று இருந்த நமக்கு நல்ல படி operation நடந்தது ஒரு வழியாக !! 03/01/2010 மகளும் , குழந்தைகளும் வந்தது பார்த்து ஒரு இனம் தெரிய சந்தோசம் , மூணு மாதம் அவர்களுடன் இருந்தது ஒரு மறு வாழ்வு , மனைவி இறந்த போது இருந்த அதே பிரிவு மகள் ஊருக்கு கிளம்பியதும் , என்னசெய்ய அவர்கள் குடும்பம் பார்க்க அவர்கள் போகத்தானே வேண்ட்டும் !!! காசு இருக்கோ இல்லையோ ஒரு மனிதனுக்கு நோய் , தணிமை, இவ்விரண்டும் வரகூடாது , இதை சொல்லி வார்த்தையால் கூறமுடியாத ஒன்று...எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரகூடாது .
கடவிளிடம் ஒரு வேண்டு கோல் உலகில் எல்லோரையும் நலமாக வை , இல்லையேல் எல்லோரையும் உன் வசம் அழைத்து கொள் !!!