Monday 14 April 2014

விக்னேஸ்வரன் 
நம்ப வீட்டு குழந்தைகள் எவ்வளவு அழகா  வண்டி ஓட்டறான் என்று பெருமை பேசும் தாய் /தந்தை இதை படிக்கவும் ,  படத்தில் உள்ள சிறுவன் 15 வயது ஒன்பதாவது படித்து கொண்டு வருகிற கல்வி ஆண்டில் (2014-2015) 10-வது போக வேண்டியவன் , மிகவும் சுறு சுறுபாய் ஓடி ஆடி விளையாடும் சிறு வயது , அவனுக்கு புது புது வண்டிகளை ஓட்ட மிகுந்த ஆர்வம் , பையனின் தயார் எப்பவும் சத்தம் போட்டு கூப்பிட்டு வீட்டில் இருக்க  செய்வார் , அவருக்கு தெரியாமல் நண்பர் களுடன் சேர்ந்து வெளியில் போய் விடுவான் , வீட்டின் இரண்டாவது (கடை குட்டி என்பதால் )பையன் என்பதால் அப்பா அத்தனை கண்டிப்பு இல்லை . 27/03/2014 அன்று மதியம் வீட்டில்  தூங்கி கொண்டிருந்தவனை நண்பர்கள் கூப்பிட்டு மூன்று பேர் ஒரே வண்டியில் செல்லும் போது, போலீஸ் நிறுத்தவே போலிசுக்கு பயந்து வண்டியை எதிர் திசைக்கு திருப்பிய சம்யம் எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதி நடுவில் அமர்ந்த விக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான் , வண்டியை ஒட்டி சென்ற பையன் மறுநாள் காலை மரணமடைந்தான் - சிறு பிள்ளைகளுக்கு வண்டியை கொடுக்கும் அப்பா/அம்மா விற்கு இது ஒரு பாடம்!!!!. வளர வேண்டிய வயதில் இரு உயிர்கள் மரண அடைய யார் காரணம் ? 

Saturday 27 April 2013

Friday 13 May 2011

பாரிஸ் பயணம்



கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி முதல் மூணு நாள் பயணமாக பாரிஸ் சென்று வந்தேன் , சிறு வயது முதல் நான் பார்க்க அசை பட்ட இடங்களில் பாரிஸ் சும் ஒன்று , இன்னும் நியூ யோர்க் பார்க்க வேண்டும் , அதற்கு நேரமும் , பொருளும் கிட்டுமோ ? பாரிஸ் என்ன அழகு ! திரும்ம போக மனம் அசை படுகிறது ....பார்க்கலாம்

Friday 13 August 2010

தேடல்

நான் சின்ன வயசா இருக்கும் போது என் தகப்பனார் அரசாங்க உத்தியோகத்தில் எப்பவும் வெளியூர் போய் வார கடைசி நாட்களில் வீடு வருவார் , அவர் வருகைகா நான் பஸ் ஸ்டான்ட் போய் கடைசி பஸ் போகும் வரை காத்திருப்பேன் , பெரும்பாலான நாட்களில் நான் காத்திருந்த நாளுக்கு அடுத்த நாளே அவர் வருவர் , அதுவும் நாங்கள் உறங்கியபின் , இப்படியாக என் பிள்ளை பருவம் !!! தந்தையின் அன்புக்காக ஏங்கிய பிள்ளை பருவம் என்னுடையது , அதுவும் 19 வயது வரை இப்படி தேடி தேடி வீட்டு உறவுக்களுடன் வாழ்ந்த நான், சம்பாதிக்க 19 வயதில் வீட்டை விட்டு வெளியேறியவன் இன்னும் வீட்டை அடைந்த பாடில்லை !!! எதை தேடி வீட்டை விட்டு வெளியே வந்தேனோ அந்த தேடல் இன்னும் முடிந்த பாடில்லை !! தேடல் தொடருகிறது இன்று வரை , என்று முடியுமோ இந்த தேடல் !!!!